Showing posts with label சாமியார். Show all posts
Showing posts with label சாமியார். Show all posts

Thursday, March 4, 2010

முட்டாள் மனிதர்கள்!

ஏதோ சாமியாராம். அவர் இப்போது அவர்கள் நினைத்த மாதிரியான சாமியார் இல்லையென்று என்று தெரிந்து விட்டதாம். அதனால் அவர் இதுவரை சொல்லிவந்த, நேற்று வரை சரியானதாக தோன்றிய கருத்துகள் எல்லாம் களங்கப்பட்டுவிட்டதாம்.அதனால் அவர் மீதும், அவரை இதுவரை நம்பி வந்தவர்கள் மீதும், அவரோடு உறவாடியவர்கள் மீதும் கோபம் கோபமாய் வருகிறதாம்.

இப்படி கோபப்படுபவர்கள் தத்தம் தன்னம்பிக்கை மீறிய சாமியார் நம்பிக்கைகளின் பின்னுள்ள மடமையை கோபம் மூலம் மூடிக்கொள்வதாகவே எனக்கு படுகிறது.

பங்காரு போன்றவர்கள் எறும்பு, ஈசல் வாழும் மண் புற்றில் சுயம்பு சக்தி என்று புருடா விட்டு இன்று சில ஆயிரம் மாணவர்கள் கொண்ட கல்வி நிறுவனங்கள் நடத்தும் போது,புது சாமியார்கள், அதை ஒரு career choice ஆக நினைப்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும் - அதை நம்புவர்கள் அல்லவா முட்டாள்கள்.

Hypocrites rule!

எல்லா பொய்மைகளும் ஒவ்வொருவிதத்தில் ஒன்றோடு ஒன்றாகி நம் சமூக முறைகளாய் இருக்கும் வரை தனிப்பட்ட முரண்பாடுகள் களைவது அதீத முயற்சி தான். ஆனாலும் ஒவ்வொன்றாய் விடியும் :)